states

img

உ.பி.யில் ரிக்‌ஷா மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் பலி  

உத்தரப்பிரதேசத்தில் இ-ரிக்‌ஷா மீது லாரி மோதியதில் வெள்ளிக்கிழமை காலை 5 பேர் உயிரிழந்தனர்.  

உத்தரப்பிரதேசம் மாநிலம் ஹர்தய் மாவட்டத்தில் பிரயாக்ராஜில் இருந்து பயணித்த லாரி ஒன்று கோட்வாலி டெஹாட்டில் உள்ள அன்ரோட் கிராம பகுதியை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது பிரயாக்ராஜ்-அயோத்தி புறவழிச்சாலையில் 8 பேரை ஏற்றிச்சென்ற இ-ரிக்‌ஷா மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.  

இந்த விபத்தில் இ- ரிக்‌ஷாவில் பயணம் செய்த பூல் காளி (60), ராஜேந்திரா (45), ரகுவிர் (55), நிர்மலா (52) மற்றும் அடையாள தெரியாத நபர் என 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து தகவலறிந்த வந்த அம்மாவட்ட போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து லாரி ஓட்டுனர் உள்பட இருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.